இத் தளம் ஜோதிடம் பயில விரும்புவோர்; ஜாதக பலன் தெரிந்து கொள்ள விரும்புவோர் மற்றும் ஜோதிட சிந்தனையாளருக்கு பயன் தரும்.சிறந்த படைப்புகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
S.R.அருள்வேல்; srarulvelu@yahoo.com; srarulvel@gmail.com; +91(0) 98428 41497

இராகு காலம்

இராகு காலம் பாகம் 1

ஜாமக்கோள் ஆருட முறையில் மீனம் இராசி காலை மணி 6.00 முதல் 7.30ஐ குறிக்கும். மகரம் 7.30-9.00; தனுசு 9.00-10.30; துலாம் 10.30-12.00; கன்னி 12.001.30; கடகம் 1.30-3.00; மிதுனம் 3.00-4.30; மேசம் 4.30-6.00ஐ குறிக்கும். 

மேலும் ஜாமக்கோள் ஆருட முறையில் கிரகவரிசை, சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி, சந்திரன், இராகு என இருக்கும்.


முதலில் கிழமை அதிபதியை மீனத்தில் நிறுத்தவும்.உதாரணமாக இன்று வியாழக்கிழமையாக இருந்தால் குருவை மீனத்தில் நிறுத்தவும். அதன்பின் பிற கிரகங்களை மேற்கண்ட கிரக வரிசைப்படி மகரம்,தனுசு,துலாம்,கன்னி,கடகம்,மிதுனம்,மேசம் இராசிகளில் குறிக்கவும்.
இதன்படி ஞாயிறுகிழமை, சூரியனை மீனத்தில் நிறுத்தியபின் செவ்வாயை மகரத்தில் நிறுத்த வேண்டும். இதேபோல் பிறகிரகங்களை மேற்சொன்னபடி நிறுத்த இராகு மேஷ இராசியில் இருப்பார். மேச இராசி, மாலை மணி 4.30 முதல் 6.00ஐ குறிக்கும். எனவே ஞாயிறுகிழமை மணி 4.30 முதல் 6.00 வரை இராகு காலம் ஆகும். இதேபோல் பிற கிழமைகளுக்கும் அமையும். முயன்று பாருங்கள்.

இராகு காலம் பாகம் 2

சூரியன் முதல் சனி வரையுள்ள கிரகங்களுக்கு கிழமைகள் உள்ளன. இராகு கேதுவுக்கு இல்லை. கெளரி பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு கிழமையிலும் உத்யோகம் எனும் சூரியன் முதல் சோரம் எனும் சனி வரை ஏழு கிரகங்கள் உள்ளன.பகல் பொழுதின் எட்டு ஜாமங்களை ஏழு கிரகங்கள் ஆட்சி செய்த்துபோக எட்டாம் ஜாமத்தை இராகு ஆட்சி செய்யும்.இக்காலம் கெளரி பஞ்சாங்கத்தில் விஷம் என இருக்கும்.காலன்,சூரியன் மகனாக கருதப்படுகிறார்.அர்தபிரகணன்,புதன் மகனாகவும்; எமகண்டன், குரு மகனாகவும்;குளிகை,சனி மகனாகவும் போற்றப்படுகின்றனர்.மேற்படி மகன்களுக்கு தம் தந்தையின் கிழமையின் முதல் ஜாமம் (மணி 6.00-7.30) ஒதுக்கப்பட்டுள்ளது.பிற கிழமைகளில் மேற்படி மகன்களின் ஆதிக்க நேரத்தை தெரிந்து கொள்ள, கிழமைகளின் பிற்போக்கு வசத்தில் எண்ணி பார்க்க வேண்டும்.



உதாரணமாக ஞாயிற்றுகிழமைக்கு பிற்போக்கு வசத்தில் உள்ள கிழமைகள் சனி,வெள்ளி,வியாழன்...ஆகும்.என்வே ஞாயிறு காலை மணி 6.00 முதல் 7.30 வரை காலன் நேரம் ஆகும். சனிக்கிழமை மணி 7.30 முதல் 9.00வரையும்;  வெள்ளி கிழமை 9.00 முதல் 10.30 காலன் நேரம்  ஆகும்.இதேபோல் பிற கிரகங்களுக்கும் அறியலாம்.
அனைத்து தினசாி காலண்டாிலும் மாத காலண்டாிலும் உள்ளதே-என்பதற்காக காரணத்தை தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது...ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்வைகள், அனைத்து ஜோதிட நூல்களிலும் உள்ளதே..அதற்கான காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா...காரண காரியம் தெரிந்தால்தான் புதிய விதிகளை வகுக்க முடியும். இராகு மற்றும் இராகு காலத்தை புரிந்து கொண்டதால் சொல்கிறேன்...ஒருவர் ஜாதகத்தில் இராகு நன்மை தரும் அமைப்பில் இருந்தால்,அவ்வீட்டு காரக வேலைகளை இராகு காலத்தில் செய்ய முழு பலன் கிடைக்கும்.இராகு தீமை தரும் அமைப்பில் இருந்தால்,அவ்வீட்டு காரக வேலைகளை இராகு காலத்தில் செய்யாமல் தவிர்ப்பதே பரிகாரம் ஆகும்.மேலும் தெளிவு பெற 9842841497க்கு அழைக்கவும்